ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பேரையூர் நாகநாதர் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூரில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி, பிரஹதாம்பாள் கோவில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2013, 11:42 pm

தினமணி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூரில் உள்ள அருள்மிகு நாகநாதசுவாமி, பிரஹதாம்பாள் கோவில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த (ஏப். 5) வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஏப். 14 -ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில்  தினமும் மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில், 9-ம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில், திருமயம் எம்எல்ஏ பி.கே. வைரமுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். தமிழ்ச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் ஜெகநாதன்,  மேற்பார்வையாளர் சீனிசேதுராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.