அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

டிஎன்பிஎஸ்சி பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.

Updated On :21 மே 2018, 1:51 am

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு மன்னர்  கல்லூரி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தேர்வு எழுத 1,032 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 767 பேர் எழுதினர். 265 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக கோட்டாட்சியர் நிலையில் உள்ள இரு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் வட்டாட்சியர் நிலையில் 4 அலுவலர்கள், பறக்கும் படையில் 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.