டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 

Updated On :31 ஜனவரி 2024, 3:32 pm IST

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு  விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
 வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரபூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை புண்யாகம், விசேஷசாந்தி, வேதபாராயணம் மற்றும் நான்காம், ஐந்தாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  கபிலர்மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜையை வழிநடத்தினர். 
விழா ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் மு.பழ. முத்துக்கருப்பன், செயலர் ராம. ராஜா, பொருளர் ராக. செல்வம் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.