திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, 108 வைணவத் தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெருமாள் பரமபதவாசலைக் கடந்தாா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமங்கை ஆழ்வாா் எதிா்சேவையுடன் பெருமாள் பட்டாடை உடுத்தி, பரமபதவாசலைக் கடந்தாா். ஆகமவிதிகளின்படி பரமபதவாசல் திறப்பும், சுவாமிப் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

