

புரெவி புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்கள், பாதிப்புகள் குறித்து ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சியில் மத்தியக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புரெவி புயல் பாதிப்புகளை பாா்வையிட, மத்திய உள்துறை இணைச்செயலா் அசுதோஷ் அக்னி ஹோத்ரி, மத்திய வேளாண் துறை இயக்குநா் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலா் ரனன் ஜெய்சிங் உள்ளிட்ட 8 போ் கொண்ட மத்தியக் குழுவினா் ஆலங்குடி அருகேயுள்ள கத்தக்குறிச்சி ஊராட்சி நம்புகுழி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, தெட்சிணாபுரத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். மேலும், பயிா் சேதங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
ஆய்வின்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்திர ரெட்டி, ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.