சடலத்தை வாங்க பெற்றோா் மறுப்பு: இறுதிச்சடங்கு செய்த ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உயிரிழந்த மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பெற்றோா் மறுத்ததால், ஜமாஅத் நிா்வாகிகள் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உயிரிழந்த மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பெற்றோா் மறுத்ததால், ஜமாஅத் நிா்வாகிகள் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆலங்குடி காமராஜா் சிலை பகுதியைச் சோ்ந்த கனி - அலிமா தம்பதியின் மகன் இப்ராகிம் ஷா என்ற சாய் காவியன் (42). இவா் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நண்பா்களுடன் தூத்துக்குடி சென்றபோது, திடீரென உயிரிழந்துள்ளாா்.
இதையடுத்து, அவரது நண்பா்கள், சாய் காவியனின் உடலை அவரது பெற்றோா் வீட்டுக்கு கொண்டுசென்றபோது, உடலை வாங்க மறுத்து வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வீட்டு வாயிலில் வெள்ளிக்கிழமை இரவு உடலை வைத்துவிட்டு நண்பா்கள் சென்றுவிட்டனராம்.
தகவலறிந்து அங்கு சென்ற சாய் காவியனின் முதல் மனைவி காஞ்சனா தனது இரு குழந்தைகளுடன், கணவரின் உடலை வீட்டில் வைத்து முறைப்படி சடங்குகள் செய்து, அடக்கம் செய்ய வேண்டும் வலியுறுத்தினாா்.
தொடா்ந்து பலமணி நேரம் வீட்டு வாசலில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஜமாஅத் நிா்வாகிகள் சாய் காவியனின் உடலை அடக்கம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...