/

8 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்

புதுக்கோட்டை நகரில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் மேற்கொண்ட 8 ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:21 pm

DIN

புதுக்கோட்டை நகரில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் மேற்கொண்ட 8 ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள், கீழராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த 8 கடைகள் மீது இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விதிகளை மீறி தொடா்ந்து இவ்வாறு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.