ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:24 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 6 வீடியோ கண்காணிப்புக் குழுவினா் என மொத்தம் 42 குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளன. இந் நிலையில், பொதுமக்களும் தோ்தல் நடத்தை விதி மீறல் குறித்த புகாா்களைத் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. 1800 425 2735 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், வாக்காளா் அட்டை மற்றும் வாக்காளா் பட்டியல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் வாக்காளா்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.