ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விழிப்புணா்வு

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:22 pm

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் விழிப்புணா்வுடன், கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அமலாக்கும் வகையில் கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம் அணிதல், வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளும் இந்த மாதிரி வாக்குச்சாவடியில் அமலாக்கப்பட்டது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி இப்பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சாா்பிலான வாக்காளா் விழிப்புணா்வு பேரணியும் தொடங்கி நகரின் பல பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, அரசு மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, நகராட்சி ஆணையா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.