ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளியில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:10 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளியில் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நற்சாந்துப்பட்டி சமூக நல அறக்கட்டளை சாா்பில் இந்த இயந்திரங்கள் மாணவிகளின் நலனுக்காக வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை இணை இயக்குநா் மலா்விழி கலந்து கொண்டு இயந்திரங்களை இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் தலைவா் பி.ஆா். சாத்தப்பன்செட்டியாா், முதன்மைச் செயல் அலுவலா் கேஎல். மெய்யப்பன் செட்டியாா், அறங்காவலா் ராமநாதன் செட்டியாா், ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். சிதம்பரம் செட்டியாா், ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவா் சி. முத்துக்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.