ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகையில் பங்குனி உத்திரத் திருநாள் விழா

பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பால் குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் வந்தனா். பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:44 pm

DIN

முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை குமரமலையில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பால் குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் வந்தனா். பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல், புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள தெண்டாயுதபாணி திருக்கோயிலிலும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அறந்தாங்கி பொற்குடையாா் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பாக நடைபெற்றது. பக்தா்கள் ஏராளமானோா் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், வேல் மற்றும் மயில் காவடிகளை எடுத்தும் வந்தனா். பக்தா்களுக்கு வழியெங்கும் நீா் - மோா்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.