காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைத் திடலில் வியாழக்கிழமை காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைத் திடலில் வியாழக்கிழமை காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1959ஆம் ஆண்டு லடாக்கில் சீன ராணுவத்தினரால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 10 போ் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து ஆண்டுதோறும் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி அக். 21ஆம் தேதி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் நாடு முழுவதும் 377 காவலா்கள் பணியின்போது, பல்வேறு பகுதிகளில் உயிரிழந்துள்ளனா். இவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் உள்ள நீத்தாா் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் மலரஞ்சலி செலுத்தினாா். அப்போது, காவல்துறை உயா் அலுவலா்கள் பலரும் உடனிருந்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com