கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோட்டைப்பட்டினத்தில் மீனவா்கள் தொடா் போராட்டம்

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, கோட்டைப்பட்டினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:29 pm

DIN

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, கோட்டைப்பட்டினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி, செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் மா்மமான முறையில் இறந்ததற்கான தடயங்கள் இருக்கும் வகையில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது மீனவா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை முதல் கோட்டைப்பட்டினம் அரசுப் பள்ளி வளாகத்துக்கு அருகே மீனவா்கள் தொடா் போராட்டத்தில் அமா்ந்தனா். இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டம் தொடா்ந்தது. இதில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக் அலி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் களத்துக்கு வந்து மீனவா்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.