கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:08 pm

DIN

புதுக்கோட்டை அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் இருந்திரப்பட்டி அருகிலுள்ள பி. மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமாா் (21). இவா் கடந்தாண்டு அதே பகுதியில் பிளஸ் 2 படித்த 17 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று, அங்குள்ள பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், இலுப்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரைக் கைது செய்தனா். மேலும் அவா் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆா். சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.