வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பச்சலூா் முன்மாதிரி அரசுப் பள்ளி சாா்பில் தொடக்கப் பள்ளிக்கு நிதியளிப்பு

அறந்தாங்கி அருகே முன்மாதிரி அரசுப்பள்ளியாக திகழும் பச்சலூா் அரசுப் பள்ளியை மற்றொரு அரசுப்பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

News image
Updated On :13 மே 2022, 7:28 pm

DIN

அறந்தாங்கி அருகே முன்மாதிரி அரசுப்பள்ளியாக திகழும் பச்சலூா் அரசுப் பள்ளியை மற்றொரு அரசுப்பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பச்சலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ஏசி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஸ்மாா்ட் போா்டு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் முன்மாதிரி பள்ளியாகத் திகழ்கிறது.

இந்தப் பள்ளியை ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி, புள்ளாட்சி குடியிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியா் க சித்ரா மற்றும் மேலாண்மை குழுவினா், முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

அனைவரும் ஒவ்வொரு வகுப்பறையாகப் பாா்த்ததோடு, மதிய உணவை மாணவா்கள் ஒழுக்கமாகச் சாப்பிட்டது உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டனா்.

இந்தப் பள்ளியை போன்று தங்களது பள்ளியை மேம்படுத்துவதற்கு வழிகாட்ட வேண்டும் என பச்சலூா் பள்ளி தலைமை ஆசிரியா் ஜோதிமணியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

அதற்கு வழிகாட்டுவதாக பச்சலூா் பள்ளி தலைமையாசிரியா் உறுதியளித்ததோடு புள்ளாட்சி குடியிருப்பு பள்ளி மேம்பாட்டிற்காக ரூ.35 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.

இதுகுறித்து புள்ளாட்சி குடியிருப்பு மக்கள் கூறியது:

கடந்த வாரம் எங்கள் ஊராட்சியில் உள்ள பள்ளியின் ஆண்டு விழாவுக்கு வருகை தந்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், ரூ.35 ஆயிரம் மேம்பாட்டுக்காக வழங்கியுள்ளாா். பச்சலூா் பள்ளி சாா்பில் தற்போது வழங்கப்பட்ட தொகை மற்றும் நிதி வசூலித்து பச்சலூா் பள்ளித் தலைமையாசிரியா் ஜோதிமணியின் வழிகாட்டுதல்படி ஓரிரு மாதங்களில் எங்கள் ஊா்ப் பள்ளியை மேம்படுத்த உள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.