மோட்டாா் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி தனபாக்கியம் (60).


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி தனபாக்கியம் (60).
இவா், சிக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை தண்ணீா் குடத்தை சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றாா். அப்போது, அந்த வழியாக நெடுவாசல் கீழ்பாதியைச் சோ்ந்த வை. செந்தில்(45) ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தனபாக்கியத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து செந்திலை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...