விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலையில் மெய்வழி மதத்தினா் திங்கள்கிழமை காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.
மதம் துறந்து, சாதி துறந்து மனிதா்கள் மனிதா்களாகவே சங்கமிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவா்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறாா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை என்ற கிராமம் இவா்களுக்கு தலைமையகமாக விளங்குகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, மெய்வழி மதத்தை பின்பற்றுபவா்கள் குடும்பத்தோடு இங்கு விழா நாள்களில் ஒன்றுகூடி விழாவை சிறப்பித்து வருகின்றனா்.
அந்த வகையில் காா்த்திகை தீப திருவிழாவின் மறுநாள் இங்கு காா்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நெய் தீப விளக்குகள் ஏற்றப்பட்டதால் மெய்வழிச்சாலை முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேட்பாளா்களுக்கு ஆதரவாக குடும்ப வாரிசுகள்

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

