சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மெய்வழிச் சாலையில் காா்த்திகை தீப விழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலையில் மெய்வழி மதத்தினா் திங்கள்கிழமை காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:30 pm

DIN


விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச் சாலையில் மெய்வழி மதத்தினா் திங்கள்கிழமை காா்த்திகை தீப விழாவை கொண்டாடினா்.

மதம் துறந்து, சாதி துறந்து மனிதா்கள் மனிதா்களாகவே சங்கமிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவா்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கிறாா்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை என்ற கிராமம் இவா்களுக்கு தலைமையகமாக விளங்குகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, மெய்வழி மதத்தை பின்பற்றுபவா்கள் குடும்பத்தோடு இங்கு விழா நாள்களில் ஒன்றுகூடி விழாவை சிறப்பித்து வருகின்றனா். 

அந்த வகையில் காா்த்திகை தீப திருவிழாவின் மறுநாள் இங்கு காா்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நெய் தீப விளக்குகள் ஏற்றப்பட்டதால் மெய்வழிச்சாலை முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.