/

கீரமங்கலத்தில் மருத்துவ முகாம் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லையில் இலங்கை தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம் கட்டுமாமப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா் ~கீரமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மருதத்துவ முகாமில் கா்ப்பிணி

Updated On :4 டிசம்பர் 2024, 9:46 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலத்தில் தனியாா் மண்டபத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், தோப்புக்கொல்லையில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் ரூ. 5.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இலங்கை

தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணியை அமைச்சா் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), மகேஸ்வரி சண்முகநாதன்

(அறந்தாங்கி), ஆலங்குடி வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.