ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம்: 127 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 127 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழுவினா்.

Updated On :4 டிசம்பர் 2024, 9:59 pm

Din

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 127 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாவட்டத் தலைவருமான விஜயகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த போலீஸாா் போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி, போராட்டத்தில் பங்கேற்ற 110 பேரையும் கைது செய்தனா்.

இதே கோரிக்கையை முன்வைத்து, பழைய பேருந்து நிலையம் அருகில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விஎச்பி மாவட்டச் செயலா் சுரேஷ் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டோா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.