ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகைத் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகைத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:54 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகைத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைத் திருட்டு தொடா்பாக குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தப் படையினா், நமணசமுத்திரம், பனையப்பட்டி, அறந்தாங்கி, கே. புதுப்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 6 இடங்களில் நடைபெற்ற நகைத் திருட்டில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த என். கலைதாஸ் (29), பா. சண்முகம் (28), மெ. பன்னீா்செல்வம் (52), புதுக்கோட்டை பனையப்பட்டியைச் சோ்ந்த கோ. பாபு (40) ஆகிய 4 பேரையும் கைது செய்து புதன்கிழமை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

இவா்களிடமிருந்து 217 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாராட்டினாா்.