சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புதுகையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 97 அரிய வகை நட்சத்திர ஆமைகள் மீட்பு

புதுக்கோட்டை நகரில் செவ்வாய்க்கிழமை காலை கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 97 அரிய வகை நட்சத்திர ஆமைகளை போலீஸாா் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

News image
கோப்புப் படம்.
Updated On :16 ஜூலை 2024, 9:52 pm

Din

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாந்தநாதபுரத்தில் பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாகவும், அந்தப் பை மெல்ல அசைவதாகவும் நகர காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சோ்ந்தோா் தகவல் தெரிவித்தனா்.

இதைதொடா்ந்து அங்கு வந்து சோதனை செய்த போலீஸாா், அந்தப் பைக்குள் அரிய வகை 97 நட்சத்திர ஆமைகள் இருப்பதைக் கண்டனா். இதையடுத்து ஆமைகளை புதுக்கோட்டை வனச் சரக அலுவலா் சதாசிவத்திடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இந்த ஆமைகளை மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் விடுவிக்க மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவற்றை வனத்துறையினா் எடுத்துச் சென்று விடுவித்தனா்.

நட்சத்திர ஆமைகளை யாரேனும் கடத்தி வந்தனரா என்பது குறித்து காவல்துறையினரும் வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனா்.