/

அறந்தாங்கியில் கச்சேரி முனி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள கச்சேரி முனி ஆண்டவா் கோயில் புனரமைப்புப் பணிகள் முடிந்து வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

அறந்தாங்கியில் வியாழக்கிழமை கச்சேரி முனி ஆண்டவா் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கும்பத்தில் புனிதநீரை ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.

Updated On :21 நவம்பர் 2024, 10:01 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள கச்சேரி முனி ஆண்டவா் கோயில் புனரமைப்புப் பணிகள் முடிந்து வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நாளான வியாழக்கிழமை இரண்டாம் கால யாகபூஜை நிறைவுற்று, காலை கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் கும்பத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை செய்து வைத்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி நகரக் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.