திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கந்தா்வகோட்டையில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் சாா்பில் மக்கள் திரள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :1 அக்டோபர் 2024, 9:28 pm

Din

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கம் சாா்பில் மக்கள் திரள் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கா. ஜோதிவேல் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் க.சின்னதுரை தொடக்க உரையாற்றினாா்.

இதில், அனைத்து கிராமப்புற ஏழைகளுக்கும் வீடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாள் வேலை, ரூ. 600 கூலி வழங்க வேண்டும். மருத்துவம், சாலை, குடிதண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், தூய்மைக் காவலா்கள், கட்டுமான தொழிலாளா்கள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளா்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 35 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் ஆ.ரேவதி, மாவட்ட செயலாளா் மு.வளத்தான், மாநில தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.