கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டை கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 70 லட்சம்

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில்கள் வாரியத்தின் மூலம் நடத்தப்படும் புதுக்கோட்டை கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ. 70 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

News image

புதுக்கோட்டை கதா் அங்காடியில் புதன்கிழமை தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :2 அக்டோபர் 2024, 9:04 pm

Din

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில்கள் வாரியத்தின் மூலம் நடத்தப்படும் புதுக்கோட்டை கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ. 70 லட்சமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையாா் கோவில் அருகேயுள்ள கதா் அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தும் பேசியபோது இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

இங்குள்ள கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு தீபாவளி சிறப்பு விற்பனையில் 30 சதவிகிதம் தள்ளுபடியும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதம் தளளுபடியும் வழங்கப்படுகிறது. கதா் கிராமத் தொழில்கள் வாரியம் மூலம் தயாரிக்கப்படும் இதர வீட்டு உபயோகப் பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, மேலாளா் கதா் கிராமத் தொழில்கள் ரெ. திருமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.