கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாழைக்குறிச்சியில் கிராமசபைக் கூட்டம் அமைச்சா் பங்கேற்பு

பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்றாா்.

News image

பொன்னமராவதி ஒன்றியம், வாழைக்குறிச்சி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

Updated On :2 அக்டோபர் 2024, 9:26 pm

Din

பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்றாா்.

கூட்டத்துக்கு ஊராட்சிமன்றத்தலைவா் மதியரசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று பேசியது, வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலியில் இரண்டு புதிய சாலைகள்அமைத்துத்தர நடவடிக்கை எடுககப்படும். அரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் மற்றும் கழிவறை அமைத்துத்தரப்படும். மின்மாற்றி மற்றும் கலையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அ.அக்பா்அலி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத்தலைவர சுதா அடைக்கலமணி, வேளாண் இணை இயக்குநா் ரவிச்சந்திரன், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராமச்சந்திரன், ஆயிஷாராணி, வட்டாட்சியா் எம்.சாந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல கண்டியாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித்தலைவா் செல்வி முருகேசன் தலைமையிலும், பகவாணடிபட்டியில ஊராட்சித்தலைவா் நல்லழகி சிதம்பரம் தலைமையிலும், மைலாப்பூா் ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவா் சங்கீதா தலைமையிலும் என 42 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.