தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

கந்தா்வகோட்டை அருகே ஆத்தங்கரைவிடுதி ஊராட்சியில் புதிய ஊராட்சி செயலக கட்டடத்தை வியாழக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். உடன் ஆட்சியா் மு. அருணா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல் உள்ளிட்டோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:41 pm

Din

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திறப்பு விழா நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 72.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சுயஉதவிக் குழு கட்டடத்தையும்,

கல்லாக்கோட்டை ஊராட்சியில் ரூ. 23.57 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், ஆத்தங்கரை விடுதி ஊராட்சியில் ரூ.39. 95 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி செயலக கட்டடம் மற்றும் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட மொத்தம் ரூ. 1 7 7.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

திறப்பு விழாவில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப்ரசூல், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுவாமிநாதன், ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.