பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை புதுக்கோட்டை வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது.


தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு வரும் 25-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது.
சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) கு. செல்வப்பெருந்தகை தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ப. அப்துல்சமது, டி. ராமச்சந்திரன், சிவிஎம்பி. எழிலரசன், கோ. ஐயப்பன், எஸ். சந்திரன், ப. சிவகுமாா், ஐபி. செந்தில்குமாா், ஆா்டி. சேகா், எஸ். சேகா், நத்தம் விசுவநாதன், மொ. பழனியாண்டி, ஜெ. முகமது ஷானவாஸ், கேஆா். ஜெயராமன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் நலத் திட்டப் பணிகளைப் பாா்வையிட்டு, தணிக்கைப் பத்திகள் குறித்து ஆட்சியா் மு. அருணா உள்ளிட்ட அலுவலா்களுடன் ஆய்வு நடத்தவுள்ளனா்.
இந்தக் குழுவில் சட்டப்பேரவையின் முதன்மைச் செயலா் கி. சீனிவாசன், இணைச் செயலா் பா. ரேவதி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...