அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்ய அரசு மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 1:33 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கைம்பெண் ம ற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தின் மூலம், நடமாடும் உணவகம், பழங்கள்- காய்கறிகள் வியாபாரம், பழச்சாறு கடை, சலவைக் கடை வைத்துக் கொள்வதற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

25 முதல் 45 வயதுக்குள்பட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கைம்பெண் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றுடன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.