தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் செய்ய அரசு மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:03 pm

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் சுயதொழில் செய்வதற்காக அரசு மானியம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கைம்பெண் ம ற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தின் மூலம், நடமாடும் உணவகம், பழங்கள்- காய்கறிகள் வியாபாரம், பழச்சாறு கடை, சலவைக் கடை வைத்துக் கொள்வதற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

25 முதல் 45 வயதுக்குள்பட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கைம்பெண் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றுடன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.