கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலிச் சான்று வழங்கிய முன்னாள் எஸ்எஸ்ஐ உள்பட 2 போ் கைது

நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ( ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:57 pm

Din

நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ( ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள ஓா் இடத்துக்கான பத்திரம் காணாமல்போனதாக கடந்த சில மாதங்களுக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முகமது காசிம் மற்றும் மூக்கையா ஆகியோரை புதன்கிழமை போலீஸாா் நேரில் அழைத்து விசாரணை நடத்தினா்.

அப்போது, ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட ‘ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அப்போது சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கீழ 5-ஆம் வீதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (60) மற்றும் மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்த மூக்கையா (49) ஆகிய இருவரையும் திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் பெயரில் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட இந்தப் போலிச் சான்றிதழுக்காக எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணியன், ரூ. 2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.