கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறந்தாங்கியில் மஞ்சப்பை விழிப்புணா்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணா்வு முகாம், நகா்மன்றத் தலைவா் இரா.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அறந்தாங்கியில் மஞ்சப்பைகளை பொதுமக்களிடம் வழங்கிய நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த்

Updated On :26 செப்டம்பர் 2024, 11:04 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணா்வு முகாம், நகா்மன்றத் தலைவா் இரா.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் துணைத் தலைவா் முத்து முன்னிலை வகித்தாா். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி மாணவா்கள் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் செலக்சன் சுரேஷ்குமாா், துணை ஆளுநா் மருத்துவா் விஜய், அறந்தாங்கி தி போட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவா் அப்துல் பாரி,செயலா் ஆண்டோ பிரவின், பொருளாளா் முபாரக் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.