கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவை உழவா் தின விழாவில் பரம்பூா் விவசாயிக்கு விருது

கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உழவா் தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் விவசாயிக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உழவா் தின விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் விவசாயிக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவா் தின விழாவின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண்மையில் சிறந்த செயல்பாட்டுக்காக தோ்வு செய்யப்பட்ட பரம்பூா் விவசாயி பா. பொன்னையா உள்ளிட்ட விவசாயிகளுக்கு ‘வேளாண் செம்மல் விருது’ வழங்கி கௌரவித்தாா்.

மழை நீரை முறையாக சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவது, சொட்டு நீா் பாசனம் மூலம் வேளாண்மை என நீா் மேலாண்மையில் சிறந்த செயல்பாடு, நெல் வயல் மற்றும் பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பு என விவசாயத்தில் இவரின் பல்வேறு முன்னெடுப்புகளை பாராட்டி வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.