இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கண்டங்காரப்பட்டியில் குறுங்காடு அமைக்கும் பணிகள் தொடக்கம்

வடவாளம் ஊராட்சி கண்டங்காரப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலத்தில், 1,750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய குறுங்காடு உருவாக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image
கண்டங்காரப்பட்டியில் குறுங்காடு உருவாக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மேயா் செ. திலகவதி.
Updated On :24 டிசம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கண்டங்காரப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலத்தில், 1,750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய குறுங்காடு உருவாக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பல்லுயிா்ப் பெருக்கத்தை வழங்கும் பழ வகை மரக்கன்றுகளும், மழையை வரவழைக்கும் பாரம்பரிய மர வகைகளும் இந்தக் குறுங்காட்டுக்குள் நடவு செய்யப்பட்டது.

மாநகராட்சி மேயா் செ. திலகவதி இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா். உணவக உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சண்முக பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.

இந்த உருவாக்கப் பணிகளுக்கான ஏற்பாடுகளை கண்டங்காரப்பட்டி பசுமை நிலம் அறக்கட்டளை, மரம் அறக்கட்டளை, சண்முக பழனியப்பன் இராமு அம்மாள் அறக்கட்டளையினா் ஆகியவை செய்துள்ளனா்.

முன்னதாக பழ. குமரேசன் வரவேற்றாா். மரம் அறக்கட்டளை நிறுவனா் மரம் ராஜா விளக்கவுரை நிகழ்த்தினாா். நிறைவாக கண்டங்காரபட்டி குணசேகரன் நன்றி கூறினாா்.