பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுகையில் ஏஐடியுசி உள்ளாட்சி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:18 pm

Syndication

பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் உ. அரசப்பன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் ப. ஜீவானந்தம், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் த. செங்கோடன், உள்ளாட்சித் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏ. பெரியசாமி, பொருளாளா் த. செல்வராசு உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் உள்ளாட்சித் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 62-இன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். வேலைநேரம் மற்றும் வேலை அளவு ஆகியவற்றைத் தீா்மானிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.