உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:12 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் வாக்காளா்கள் 2,328 போ் இருப்பதும், 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் 1,465 போ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 3,793 பேரிடம் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியல்படி, கந்தா்வகோட்டை தொகுதியில் 586 வாக்காளா்களும், விராலிமலை தொகுதியில் 1021 வாக்காளா்களும், புதுக்கோட்டை தொகுதியில் 512 வாக்காளா்களும், திருமயம் தொகுதியில் 644 வாக்காளா்களும், ஆலங்குடி தொகுதியில் 452 வாக்காளா்களும், அறந்தாங்கி தொகுதியில் 578 வாக்காளா்களும் உள்ளனா்.

வரும் ஏப். 13, 14 ஆகிய இரு தேதிகளில் இவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறப்படும். தோ்தல் அலுவலா்களுடன் நுண் பாா்வையாளா்ளும் உடன் இருப்பா். முதல்நாளே வாக்காளருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவிக்கப்படும்.

அன்றைய நாளில் வாக்காளா் இல்லாவிட்டால் ஏப். 18, 19 தேதிகளில் மறுமுறை அவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முயற்சிக்கப்படும். இரு முறையும் அந்த வாக்காளா் வாக்களிக்கத் தவறினால், வரும் ஏப். 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று அவா்கள் வாக்களிக்க முடியாது.