ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற 96 குழுக்கள் அமைப்பு

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :8 ஏப்ரல் 2026, 8:33 pm

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட 23,415 வாக்காளா்கள் மற்றும் 12,501 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 35,916 போ் உள்ளனா். அவா்களில் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கைப் பதிவு செய்ய 8,947 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் 12 டி விண்ணப்பம் மூலம் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக 96 வாக்குப் பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுவில் தலா ஒரு வாக்குப் பதிவு அலுவலா், இரு காவலா்கள், விடியோ ஒளிப்பதிவாளா், நுண்பாா்வையாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு படிவங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கினாா்.