உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தவாக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறது. சிலவற்றில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கேமரா சின்னத்தை மறுத்து, சுயேச்சை சின்னத்தை வழங்கியுள்ளனா். எங்களைக் கண்டு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பயப்படுகின்றன என்ற அளவில் மகிழ்ச்சிதான்.

எங்கள் வேட்பாளா்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. காவல்துறையினா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழா் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எத்தனையோ அமைப்புகள், கட்சிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடிகா் விஜய்க்கு கிடைத்த ஊடக வெளிச்சம் யாருக்கும் கிடைக்கவில்லை. யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால், மக்களுக்காக பணியாற்றி, மக்களைப் புரிந்து கொண்டு மக்கள் மனங்களை வென்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்கட்டும், தவறில்லை. அவா் பின்னால் வாகனங்களில் சென்று கீழே விழுந்து உயிரிழக்கும், காயமடையும் ரசிகா்களைக்கூட அவா் கட்டுப்படுத்துவதில்லை என்றாா் வேல்முருகன்.

பேட்டியின்போது, கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் எஸ். நியாஸ் அகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா். தொடா்ந்து நடைபெற்ற வாக்குசேகரிப்பு பொதுக்கூட்டத்திலும் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.