மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் எம். கணேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சி. லோகநாதன், ஜி. கிரிஜா, துணைச் செயலா்கள் வி. ரமேஷ், ஜி. புவனேஷ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

மானாமதுரையில் ஆகாஷ் உயிரிழப்பு: 4-ஆவது நாளாக தொடரும் சாலை மறியல்

இளைஞா் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரையில் 3-ஆவது நாளாக மறியல் போராட்டம்

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது

மாற்றுத்திறனாளிகள் தொடா் மறியல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


