நாளை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

Published on

மத்திய உள்துறை அமைச்சா் வருகையையொட்டி புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) ஒரு நாள் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகிறாா்.

எனவே, அன்று ஒரு நாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com