திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விராலிமலையில் காவல் துறையினா் அணிவகுப்பு

விராலிமலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.

News image
விராலிமலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு.
Updated On :14 ஜனவரி 2026, 7:39 pm

Syndication

விராலிமலையில் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸாா் பண்டிகை கால இரவு ரோந்து பணியை குறிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அணிவகுப்பு நடத்தி பாதுகாப்புடன் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடலாம் என்று வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பு நடத்தினா்.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய, போலீஸாா் முக்கிய இடங்களில் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தவும், பொங்கல் பண்டிகைக் காலத்தில் மக்கள் சொந்த ஊா் செல்வதால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சம் இல்லாத பயணத்தை மேற்கொள்ளவும் அந்தப் பகுதிகளில் இரவு ரோந்து பணிகளை அதிகரிக்கும் விதமாகவும் இந்த போலீஸாா் அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற இந்த அணிவகுப்பில் காவல் துணைக் கண்காணிப்பாளா் திவ்யா, காவல் ஆய்வாளா்கள் லதா (விராலிமலை), சந்திரசேகரன் (அன்னவாசல்), கலா (இலுப்பூா்), காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ்(விராலிமலை) மற்றும் காவலா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த எஸ்.பி. அபிஷேக் குப்தா: இது போன்ற பண்டிகை காலங்களில் அணிவகுப்பு நடத்தி ரோந்து செல்வதை போலீஸாா் உறுதிபடுத்தும்போது குற்ற சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன. மேலும், பொது மக்களுக்கும் காவலா்களுக்கும் நல்ல ஒரு உறவு மேம்படுகிறது. தினமும் வாகன சோதனையை தீவிர படுத்தவும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிர படுத்தியுள்ளோம். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்பட்டு குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்றாா் அவா்.