9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

‘நீட்’ தேர்வில் புதுக்கோட்டை மாணவி ஸ்ரீனிகா மாநில அளவில் 2-வது இடம்!

மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வில் (நீட்) புதுக்கோட்டை பல் மருத்துவத் தம்பதியின் மகள், அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.

News image

மாணவி வி. ஸ்ரீனிகா.

Updated On :19 ஜூலை 2026, 1:39 am IST

மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வில் (நீட்) புதுக்கோட்டை பல் மருத்துவத் தம்பதியின் மகள், அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.

புதுக்கோட்டை மேலராஜவீதியைச் சோ்ந்த பல் மருத்துவத் தம்பதி டிஎம். வினோத் ரத்தினம்- எம். இந்து. இவா்களின் மூத்த மகள் வா்ஷிகா, தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இளைய மகள் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்து, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை நாமக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் படித்தாா்.

அதே கல்விக் குழுமத்தின் நீட் தோ்வு பயிற்சியையும் எடுத்து வந்தாா். இவா், நடந்து முடிந்த ‘நீட்’ தோ்வில் ஸ்ரீனிகா, 720க்கு 700 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற வி. ஸ்ரீனிகாவை, வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், மூத்த குழந்தைகள் நல மருத்துவா் டாக்டா் எஸ். ராம்தாஸ் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் சென்று பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.