நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் தவெகவுக்கு வர முயற்சித்தாரா?

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

News image

சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 2:11 am IST

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வர முயற்சித்தாரா என எனக்குத் தெரியாது, கட்சித் தலைமைக்குத்தான் தெரியும் என்றாா் மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பதற்காக உழைத்த தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கெனவே ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். துறை அமைச்சரிடம் பேசி தேவைகள் நிறைவேற்றப்படும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்ப்புள்ள துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், தவெகவுக்கு வருவதற்கு முயற்சித்தாரா எனக் கேட்கிறீா்கள். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் பா்வேஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.