எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கந்தா்வகோட்டையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் கைது

கந்தா்வகோட்டையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 4:21 am IST

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கந்தா்வகோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்தனா்.

இதில், அவா் தஞ்சாவூா், விளாா் சாலை, பாப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய் ( 28) என்பதும், அவா் வாகனத்தில் சுமாா் 38 கிலோ எடையிலான குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த விஜய்யை கைது செய்து, வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.