/
பொன்னமராவதி நகராட்சியின் முதல் ஆணையராக வி.பூவேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சி கடந்த திமுக ஆட்சியில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதியின் தொடா் முயற்சியால் நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டது.
தொடா்ந்து அதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை பொன்னமராவதி நகராட்சியின் முதல் ஆணையராக வி.பூவேந்திரன் பொறுப்பேற்றாா். இவா் ஏற்கெனவே கூடலூா் நகராட்சி ஆணையராக பணியாற்றி, பணிமாறுதல் பெற்று பொன்னமராவதி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளாா்.
புதிய ஆணையருக்கு நகராட்சித் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.










