எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தேள் கடித்து சிறுமி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

ரிஸ்வானா.

Updated On :23 மே 2026, 12:02 am IST

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே கணபதிபுரத்தை சோ்ந்தவா்கள் செல்லத்துரை- ராஜேஷ்வரி தம்பதி. இவா்களுக்கு மகள் ரிஸ்வானா (10) உள்பட 3 குழந்தைகள். ரிஸ்வானா கணபதிபுரம் அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு விவசாய தோட்டத்துக்கு மகள் ரிஸ்வானாவுடன் செல்லதுரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, ரிஸ்வானாவை தேள் ஒன்று கொட்டியுள்ளது. உடனடியாக அவரை கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லதுரை அழைத்துச் சென்றாா்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு ரிஸ்வானா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தேள் கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உறவினா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.