திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்

Updated On :12 மே 2013, 6:28 am IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் தலைவர், துணைத் தலைவர் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சை நகரில் கரந்தை திராவிடன் கூட்டுறவு நகர வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி, சண்முகா நகர் கூட்டுறவு கட்டட சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழக அலுவலர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் அதிமுக தொகுதிச் செயலர் துரை. திருஞானம், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் ஏ.ஜி. தங்கப்பன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், மாவட்ட மாணவரணி செயலர் ஆர். காந்தி, மாவட்ட இளைஞரணி செயலர் ஜயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.