அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நவ.19-இல் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான கலைப்போட்டிகள் நவ. 19-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:04 am

DIN

தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறுவர்களுக்கான கலைப்போட்டிகள் நவ. 19-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா. குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில்,  சிறுவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நவ. 19-ஆம் தேதி நடைபெறுகிறது.  
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 - 8,  9-12,  13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ள மாணவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றிதழ்களுடன், அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு நவ. 19-ஆம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும். இங்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்றிடங்களைப் பெறுவோருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மாவட்ட கலைப் போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த சிறுவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.