மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஓவியக் கலைக் காட்சி நடத்த கலைஞர்கள் படைப்புகளை அளிக்கலாம்

தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் ஓவியக் கலைக் காட்சியை நடத்துவதற்கு ஓவியங்கள், சிற்பங்கள் கலைஞர்களிடமிருந்து

Updated On :5 ஏப்ரல் 2018, 9:36 am IST

தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் ஓவியக் கலைக் காட்சியை நடத்துவதற்கு ஓவியங்கள், சிற்பங்கள் கலைஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என மண்டல கலை பண்பாட்டு மைய இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:  தற்போது கலை, பண்பாட்டுத் துறை சார்பில் அனைத்து மண்டலங்களிலும் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தவும் சிறந்த கலைப் படைப்புக்கு வல்லுநர் குழுக்களைக் கொண்டு தெரிவு செய்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை தலா பத்து கலைஞர்களுக்கு அளித்திடவும் அரசாணை வெளிப்படப்பட்டுள்ளது. 
அதன்படி,  கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
எனவே கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், 
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளை உதவி இயக்குநர் அலுவலகம், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ நேரடியாகவோ ஏப். 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.