தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் ஓவியக் கலைக் காட்சியை நடத்துவதற்கு ஓவியங்கள், சிற்பங்கள் கலைஞர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என மண்டல கலை பண்பாட்டு மைய இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தற்போது கலை, பண்பாட்டுத் துறை சார்பில் அனைத்து மண்டலங்களிலும் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தவும் சிறந்த கலைப் படைப்புக்கு வல்லுநர் குழுக்களைக் கொண்டு தெரிவு செய்து முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை தலா பத்து கலைஞர்களுக்கு அளித்திடவும் அரசாணை வெளிப்படப்பட்டுள்ளது.
அதன்படி, கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் ஓவியக் கலைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி நடத்தப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
எனவே கலை பண்பாட்டுத் துறை தஞ்சாவூர் மண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளை உதவி இயக்குநர் அலுவலகம், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ நேரடியாகவோ ஏப். 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

ஓமன் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து!

வாக்களித்தால் மட்டும் போதுமா?

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


