தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆற்றில் மூழ்கி இளைஞர் சாவு

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (23). இவர் தஞ்சாவூரில் உள்ள மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். 
இவர் விளார் புறவழிச்சாலையில் வெட்டிக்காடு பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை குளிக்கச் சென்றார். பாலத்தில் இருந்து குதித்து, நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். 
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைத் தேடினர். பின்னர், நெய்வாய்க்கால் கரையோரம் ஒதுங்கிய ஸ்டீபன் ராஜ் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.