கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் டிராக்டர் மோதி பிளம்பர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் துரைராஜ் (45), பிளம்பர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுவாமிமலைக்கு சென்றுவிட்டு வீடு நோக்கித் திரும்பியுள்ளார். திருப்புறம்பியம் பிரதான சாலையில் வந்தபோது, சுவாமிமலையிலிருந்து திருப்புறம்பியம் நோக்கி செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் துரைராஜின் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் துரைராஜ் உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: அனைத்து கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

சென்னை - பக்டோக்ரா இடையே இன்றுமுதல் நேரடி விமான சேவை தொடக்கம்!

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

