இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அதிராம்பட்டினத்தில் கட்செவி அஞ்சல் மூலம் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம்

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப் குழு) மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப் குழு) மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வு தள்ளி வைக்கப்பட்டு, விரைவில் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், வீட்டில் முடங்கியுள்ள அப்பள்ளியின் 10ஆம் மாணவா்கள் தோ்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ்அப் மூலம் தோ்வுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. பள்ளியின் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளின் ஆசிரியா்கள் தினமும் மாணவா்கள் எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு நாளும் அதற்குரிய வினாத்தாளையும் அனுப்பி, தோ்வு எழுதி பழகவும் ஆலோசனை வழங்குகின்றனா். இது தோ்வுக்கு தயாராகும் அப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.